செய்திகள் :

"பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளுக்கும் பவாரியா கும்பலுக்கும் தொடர்பா?" - ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

post image

சேலத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது, "தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை உட்கோட்ட காவல்நிலையங்களில் கைது எண்ணிக்கை, கண்டுபிடிக்காமல் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம்.

இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், சேலம் ஊரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்ய இருக்கிறோம்.

Police
Police

குற்றம் அதிகமாக நடக்கும் பகுதிகள், குற்றம் குறைவாக நடக்கும் பகுதிகள், குற்றத்திற்கான காரணம் என ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆய்வு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பெரும்பாலும் நிலம் தொடர்பான வழக்கு, அடிதடி, விபத்து வழக்குகள் அதிகமாக வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாதம் 150-160 கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது மாதம் 70 கொலைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.

அந்தளவிற்கு மாவட்ட எஸ்.பி., மாநகர ஆணையர், டி.ஐ.ஜி., மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும், "கொலைகளைப் பொறுத்தவரை தென்மண்டலம் முதலிடத்திலும், மேற்கு மண்டலம் 2வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பண்ணைத் தோட்டங்களில் 26 கொலைகள் நடந்துள்ளன.

பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளுக்கு வடமாநில பவாரியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து கொலைகளும் வெவ்வேறு காரணத்திற்காக நிகழ்ந்தன.

police
police

இதற்கும் பவாரியா கும்பலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில், தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா, வார்னிங் சிஸ்டம் வைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை ஜியோ-டேக் மூலம் பதிவு செய்து, கேமரா எங்கு உள்ளது, எந்த நிலையில் உள்ளது என்பது குறித்துக் கண்காணிக்கப்படுகிறது" என்றார்.

"போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்குத் துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலிருந்து வரும் நபர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறோம்.

போதைப்பொருள் பயன்பாடு என்பது சமுதாய பிரச்னை உள்ளது. இதனைப் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குறைக்கலாம். போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க உளவுத்துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம்.

பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குற்றம் அதிகளவில் நடக்கும் ஹாட்ஸ்பாட் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் பதிவேடுகளின் அடிப்படையில் விரைந்து தண்டனை பெற்றுத்தரச் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரவுடிகள் கொலைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனை இன்னும் குறைக்க ஊரக உட்கோட்டப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளோம்.

பொது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க

``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.இவருக்கு3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?

தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.இதன் க... மேலும் பார்க்க