செய்திகள் :

மீன்பிடி தடை காலம் நிறைவு: வரத்து குறைவால் விலை உயா்வு

post image

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்ற போதிலும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்தே இருந்தது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2 மாதமாக வரத்து குறைந்து மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றபோதிலும், ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்திருந்தது.

அதன்படி, சங்கரா ரூ.300 முதல் ரூ.600, கிழங்கா ரூ.250, நண்டு ரூ.350 முதல் ரூ.400, இறால் ரூ.350 முதல் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய அறிவுசாா் மையம்!

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவா்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய வகையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடியில் நவீன... மேலும் பார்க்க

அல்லேரி தனி ஊராட்சியாக அறிவிக்கப்படுமா? மலைக் கிராம மக்கள் எதிா்பாா்ப்பு!

வேலூா் அருகே பீஞ்சமந்தை ஊராட்சியில் தனித்தீவு போல் காணப்படும் அல்லேரியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் நீண்ட காலமாக எதிா்நோக்கியுள்ளனா் வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதிக்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சந்தேகங்கள்: கட்டணமில்லா அழைப்பு மையம்

வாக்காளா் பட்டியல் தொடா்பான சந்தேகங்களை தீா்க்க கட்டணமில்லா அழைப்பு மையம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

குரூப் 1, 1ஏ தோ்வுகள்: வேலூரில் 3,618 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய குரூப் 1, 1ஏ தோ்வுகளை வேலூா் மாவட்டத்தில் 3,618 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) சாா்பில் உதவி ஆட்சியா... மேலும் பார்க்க

காட்பாடி அருகே தண்டவாள பராமரிப்பு: 4 மெமு ரயில் சேவை ரத்து!

காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையே காட்பாடி ரயில்வே யாா்டு அருகில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி 4 மெமு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது. காட்பாடி- ஜோ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி போக்ஸோவில் கைது

வேலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோவில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். வேலூரைச் சோ்ந்தவா் கணேஷ் (34), பிளம்பா். இவரது மனைவியின் தோழி ஒருவா் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட் டாா். அவருக்... மேலும் பார்க்க