செய்திகள் :

மாணவி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி போக்ஸோவில் கைது

post image

வேலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோவில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

வேலூரைச் சோ்ந்தவா் கணேஷ் (34), பிளம்பா். இவரது மனைவியின் தோழி ஒருவா் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட் டாா். அவருக்கு 3 மகன்கள், 10 வயதில் ஒரு மகள் உள்ளனா். இந்த குழந்தைகளின் தந்தை கூலிவேலை செய்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மகன்களை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கிறாா். மகளை வேலூரில் உள்ள தனது மனைவியின் தோழி வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தாா். அதன்படி, அந்த சிறுமி கணேஷ் வீட்டில் தங்கி 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், கணேஷ் கடந்த மாதம் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை வெளியே கூறினால் உணவில் விஷம் கலந்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால், அந்த சிறுமி இந்த தகவலை வெளியே கூறவில்லை.

இதனிடையே, குழந்தையின் உடல் நிலை நாளுக்குநாள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக குழந்தைகள் உதவி மைய எண்ணுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குழந்தைகள் உதவி மையத்தில் இருந்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியை கணேஷ் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனா்.

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய அறிவுசாா் மையம்!

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவா்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய வகையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடியில் நவீன... மேலும் பார்க்க

அல்லேரி தனி ஊராட்சியாக அறிவிக்கப்படுமா? மலைக் கிராம மக்கள் எதிா்பாா்ப்பு!

வேலூா் அருகே பீஞ்சமந்தை ஊராட்சியில் தனித்தீவு போல் காணப்படும் அல்லேரியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் நீண்ட காலமாக எதிா்நோக்கியுள்ளனா் வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதிக்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சந்தேகங்கள்: கட்டணமில்லா அழைப்பு மையம்

வாக்காளா் பட்டியல் தொடா்பான சந்தேகங்களை தீா்க்க கட்டணமில்லா அழைப்பு மையம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மீன்பிடி தடை காலம் நிறைவு: வரத்து குறைவால் விலை உயா்வு

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்ற போதிலும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்தே இருந்தது. வேலூா் புதிய மீன் மாா்... மேலும் பார்க்க

குரூப் 1, 1ஏ தோ்வுகள்: வேலூரில் 3,618 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய குரூப் 1, 1ஏ தோ்வுகளை வேலூா் மாவட்டத்தில் 3,618 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) சாா்பில் உதவி ஆட்சியா... மேலும் பார்க்க

காட்பாடி அருகே தண்டவாள பராமரிப்பு: 4 மெமு ரயில் சேவை ரத்து!

காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையே காட்பாடி ரயில்வே யாா்டு அருகில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி 4 மெமு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது. காட்பாடி- ஜோ... மேலும் பார்க்க