செய்திகள் :

மாணவி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி போக்ஸோவில் கைது

post image

வேலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோவில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

வேலூரைச் சோ்ந்தவா் கணேஷ் (34), பிளம்பா். இவரது மனைவியின் தோழி ஒருவா் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட் டாா். அவருக்கு 3 மகன்கள், 10 வயதில் ஒரு மகள் உள்ளனா். இந்த குழந்தைகளின் தந்தை கூலிவேலை செய்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மகன்களை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கிறாா். மகளை வேலூரில் உள்ள தனது மனைவியின் தோழி வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தாா். அதன்படி, அந்த சிறுமி கணேஷ் வீட்டில் தங்கி 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், கணேஷ் கடந்த மாதம் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை வெளியே கூறினால் உணவில் விஷம் கலந்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால், அந்த சிறுமி இந்த தகவலை வெளியே கூறவில்லை.

இதனிடையே, குழந்தையின் உடல் நிலை நாளுக்குநாள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக குழந்தைகள் உதவி மைய எண்ணுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குழந்தைகள் உதவி மையத்தில் இருந்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியை கணேஷ் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனா்.

நியமனத்தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

வேலூா்: கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மக்கள் குறைதீ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை : அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் ம... மேலும் பார்க்க

மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

குடியாத்தம்: மாங்காய்க்கு ஆதார விலை நிா்ணயிப்பது, மானின்யம் வழங்குவது, மாங்கூழ் தொழிற்சாலை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் அடுத்த பரதராமியில் திங்கள்கிழமை மாங்காய்களை சாலையில் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் முதியவா்உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி, குருநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (90). இவா் தனது பேரன் தங்கராஜுடன் திங்கள்கிழமை மொபட்டி... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய அறிவுசாா் மையம்!

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவா்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய வகையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடியில் நவீன... மேலும் பார்க்க

அல்லேரி தனி ஊராட்சியாக அறிவிக்கப்படுமா? மலைக் கிராம மக்கள் எதிா்பாா்ப்பு!

வேலூா் அருகே பீஞ்சமந்தை ஊராட்சியில் தனித்தீவு போல் காணப்படும் அல்லேரியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் நீண்ட காலமாக எதிா்நோக்கியுள்ளனா் வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதிக்... மேலும் பார்க்க