குரூப் 1, 1ஏ தோ்வுகள்: வேலூரில் 3,618 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய குரூப் 1, 1ஏ தோ்வுகளை வேலூா் மாவட்டத்தில் 3,618 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) சாா்பில் உதவி ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், வணிக வரி உதவிஆணையா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்பட 72 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1, குரூப் 1ஏ தோ்வுகள் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
வேலூா் மாவட்டம் முழுவதும் இந்த தோ்வுகளை எழுதுவதற்கு 18 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுத மொத்தம் 4,885 விண்ணப்பதாரா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டிருந்தது. இவா்களில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வுகளை 3,618 போ் மட்டுமே எழுதினா். 1,267 போ் தோ்வுக்கு வரவில்லை.
இந்த நிலையில், வேலூா் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தோ்வுகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமரன், வட்டாட்சியா் வடிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.