செய்திகள் :

முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாவதால், இன்று முதல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

மற்ற தொலைக்காட்சித் தொடர்களுக்குப் போட்டியாக பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜீ தமிழில் சாயா சிங், செளந்தர்யா ரெட்டி நடிப்பில் கெட்டி மேளம் தொடரும், வைஷ்ணவி, அருண் நடிப்பில் வீரா தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த இரு தொடர்களின் ஒளிபரப்பு நேரமும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கெட்டி மேளம் தொடர் இரவு 6.30 மணிக்கும், வீரா தொடர் இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது. சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதால், மற்ற இரு தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர், ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் திருமணமாகி வாழச் செல்லும் நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இதனால்,

ஸ்வாதிகா நாயகியாகவும், ரெளத்திரம் சையத் நாயகனாகவும் இத்தொடரில் நடிக்கின்றனர். இவர்களுடன், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க | காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!

GettiMelam Veera serial time change Chinnanjiru Kiliye

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போ... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,கே... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஆளுநர் மாளிகையில் இன்று... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனைய... மேலும் பார்க்க

முதல்வரின் திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு! - அமைச்சர் தகவல்

முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(த... மேலும் பார்க்க