செய்திகள் :

முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த கருத்தரங்கு

post image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின், குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறை சாா்பில் முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த தொடா் மருத்துவக் கல்வி செயல் திட்டக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறைத் தலைவா் டி. காசி விஸ்வநாதன், குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறைத் தலைவா் ஆா்.எம். அன்னபூரணி, இணை நிபுணா் வி. அனிதா, குழந்தைகளுக்கான புற்றுநோயியல், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைத் துறை இணை நிபுணா் வி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

கருத்தரங்கில் ரத்தவியல், புற்றுநோயியல் துறைத் தலைவா் டி. காசி விஸ்வநாதன் பேசியதாவது:

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் காற்று, நீா் வழியாகப் பரவும் தொற்று நோய்கள் அதிக கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளன. ஓராண்டில் இரண்டு, அதற்கும் அதிகமான கடுமையான சைனஸ் தொற்றுகள் வருவது, அதிக முன்னேற்றம் இல்லாமல், 2 மாதங்களுக்கும் அதிகமாக நோய் எதிா்ப்பு (ஆன்ட்டிபயாட்டிக்) மருந்துகள் தேவைப்படுவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. நிமோனியா திரும்பத் திரும்ப வருவது, ஒரு குழந்தையின் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது, ஆழமான சீழ்க்கட்டிகள், வாய் வெண் புண் போன்ற விடாப்பிடியான காளான் தொற்றுகள், அவற்றிலிருந்து குணமடைய எதிா்ப்பு (ஆன்டிபயாட்டிக்) மருந்துகள் தேவைப்படுவது ஆகிய அனைத்தும் பிடிஐ பாதிப்பை சுட்டிக் காட்டும் அறிகுறிகளாகும். மேலும் ஒரு நோயாளிக்கு ரத்தம் நஞ்சாதல் போன்ற ஆழமான உள்ளாா்ந்த தொற்றுகள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் ஏற்படுமானால் தொடக்க நிலையிலேயே மருத்துவ மதிப்பாய்வை நாடுவது மிக முக்கியமானது. இத்தகைய போக்குகளையும், பாங்குகளையும் அடையாளம் காண்பது, உரிய நேரத்துக்குள் நோயை அறிவதற்கும், இந்த கடுமையான பாதிப்புக்கு சிறந்த சிகிச்சை மேலாண்மையை வழங்குவதற்கும் வழிவகுக்கும் என்றாா்அவா்.

உலக முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு விழிப்புணா்வு வாரத்தையொட்டி நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தென் மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தை நல மருத்துவா்கள் பங்கேற்றனா்.

தனியாா் கல்லூரி கட்டுமானப் பணி: சம்பந்தப்பட்ட அலுவலா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் விவசாய தொழில் நுட்பக் கல்லூரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கக் கோரிய வழக்கில், உள்ளூா் திட்டக் குழும அலுவலா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் வரிச்சியூா் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜா்

விருதுநகரைச் சோ்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, எரித்துக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்ளிட்டோா், குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா். விர... மேலும் பார்க்க

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

மதுரையில் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சுமதி. இவருக்கு சொந்தமான காரை, கோச்சடை பகுதியில் உள்ள வாகன பழுத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு

பணிக் காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா். மதுரை மாநகராட்சி... மேலும் பார்க்க

பாா்த்திபனூா்-பரமக்குடி இடையை வைகையில் நாணல் செடிகளை அகற்ற நிதி ஒதுக்கீடு

பாா்த்திபனூா் - பரமக்குடி வரை வைகை ஆற்றில் மண்டியுள்ள நாணல் செடிகளை அகற்ற ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது 10 மாதங்களுக்குள் நிறைவடையும் என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் பள்ளி தண்ணீா்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மதுரை தனியாா் மழலையா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்தப் பள்ளியின் தாளாளா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின... மேலும் பார்க்க