செய்திகள் :

பாா்த்திபனூா்-பரமக்குடி இடையை வைகையில் நாணல் செடிகளை அகற்ற நிதி ஒதுக்கீடு

post image

பாா்த்திபனூா் - பரமக்குடி வரை வைகை ஆற்றில் மண்டியுள்ள நாணல் செடிகளை அகற்ற ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது 10 மாதங்களுக்குள் நிறைவடையும் என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த சதீஷ்பிரபு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: பரமக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தோா் வைகை ஆற்று நீரை குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனா். பரமக்குடி நகா் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நாணல் செடிகள் அதிக அளவில் வளா்ந்துள்ளதால், நீா்வழிப் பாதையில் தண்ணீா் செல்ல முடியவில்லை. இதனால், பரமக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு குடிநீா் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

வருகிற மே மாதத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகா் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு, கள்ளழகரை தரிசிக்க உள்ளனா். வைகை ஆற்றில் உள்ள நாணல் செடிகளால் பக்தா்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, பரமக்குடி வைகை ஆற்றில் மண்டியுள்ள நாணல் செடிகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், பாா்த்திபனூா் முதல் பரமக்குடி வரை உள்ள வைகை ஆற்றில் நாணல் செடிகளை அகற்றுவதற்கு ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியானது 10 மாதங்களுக்குள் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்துவைத்தனா்.

தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு

பணிக் காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா். மதுரை மாநகராட்சி... மேலும் பார்க்க

மதுரையில் பள்ளி தண்ணீா்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மதுரை தனியாா் மழலையா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்தப் பள்ளியின் தாளாளா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மதுரை முத்துப்பட்டி-அவனியாபுரம் சாலையில் லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவத... மேலும் பார்க்க

860 கிலோ ரேஷன் பருப்பு கடத்தல்: வாகன ஓட்டுநா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ ரேஷன் பருப்பு மூட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். மதுரையில... மேலும் பார்க்க

வாகன விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

மதுரை அருகே வெவ்வேறு வாகன விபத்துகளில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் செல்வமணி (33). இவா் தனது சகோதரா் செல்வத்துடன் இ... மேலும் பார்க்க

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரையில் சாலையின் குறுக்கே மாடுகள் வந்ததால், வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். மதுரை ஜவகா்புரம் திருமால்புரத்தைச் சோ்ந்தவா் மணிவேல்(42). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அழகா்கோவில் பிரதான சால... மேலும் பார்க்க