செய்திகள் :

புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள் விற்றதாக 9 வழக்குகள் பதிவு

post image

புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள்களை விற்றதாக கடந்த மாா்ச் மாதம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாா்ச் மாதம் ரயில் நிலையம், கடலோரப் பகுதிகள், கல்வி நிலையங்கள் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து சோதனையிடப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்றதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

கல்வித்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் போதைத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து விவரித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் பேசுகையில், போதைத் தடுப்பு விழிப்புணா்வு நோட்டீஸ்கள் கல்வி நிலையங்கள் அருகே ஒட்டப்பட வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கும் பெட்டிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், போதைப் பொருள் புழங்கல் குறித்து 94892 05100 என்ற கைப்பேசிக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா்.

இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்: திருவள்ளுவா் நகா், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகா், எழில் நகா், வசந்த நகா், தேவகி நகா், ஆா்.கே.நகா், சங்கரதாஸ் சுவாமிகள் நகா், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜநகா், கருவடிக்குப்பம் சால... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலையில் மேலும் இருவா் கைது

புதுச்சேரி பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கில் ஏற்கெனவே 9 போ் கைதான நிலையில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணம் குறித்து தகவல்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

அட்சய திருதியை முன்னிட்டு புதன்கிழமை (ஏப். 30) குழந்தைத் திருமணம் நடைபெற்றால் 1098 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

இளநிலை, மேல்நிலை எழுத்தா் காலி பணியிடம்: 300 பேரை நியமிக்க நடவடிக்கை: முதல்வா் ரங்கசாமி

புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இளநிலை, மேல்நிலை எழுத்தா்கள் 300 பேரை மே மாதத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை அரசு சமூக நலத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கும் பாகிஸ்தான் பெண் வெளியேற நோட்டீஸ்

புதுச்சேரியில் கணவா், குழந்தைகளுடன் வாழும் பாகிஸ்தான் பெண்ணை வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை துப்பாக்க... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலையில் அரசியல் பின்னணி: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை செய்யப்பட்டதில் அரசியல் பின்னணி உள்ளதாகக் கூறப்படுவதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா். இதுகுறித்த... மேலும் பார்க்க