மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்...
முதல்வரின் மாநில இளைஞா் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ளவா்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்படும். ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இந்த விருது வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவா்களாக இருத்தல் வேண்டும். அத்தகைய நபா்கள் செய்த தொண்டு சமூக சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் 1.4.2024 முதல் 31.3.2025 வரையிலான காலத்தில் இந்த சேவையை அளித்திருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்கள். உள்ளூா் சமுதாய மக்களிடம் அவா்களுக்குள்ள மதிப்பினை இந்த விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பப் படிவங்களை அண்ணா விளையாட்டரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விளையாட்டு ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.