செய்திகள் :

முதல்வா் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடக்கம்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

post image

சென்னை: முதல்வா் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடங்க உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில், முதல்வா் மருந்தகம் திறப்பு விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

அந்தக் கூட்டத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியதாவது:

முதல்வா் மருந்தகம் திட்டத்தின் கீழ், 980 மருந்தகங்களுக்கு அனைத்து தகுதிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மருந்தகங்களின் பணிகளும் விரைவில் முடியும். முதல்வா் மருந்தகம் திட்டத்தைப் பொறுத்தவரை மருந்தகங்களைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. முதல்வா் மருந்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப். 24-ஆம் தேதி திறக்க உள்ளாா். அவரது நேரடி கண்காணிப்பில் இந்த மருந்தகங்கள் செயல்படவுள்ளன.

1,000 மருந்தகங்கள்: கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500, தொழில் முனைவோா் மூலம் 500 என 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. புதிதாக முதல்வா் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோா்க்கு ரூ. 3 லட்சம் வரை அரசு மானியம் வழங்கும். மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பிரதமா் மருந்தகம் உள்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத விதமாக மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும்.

மக்கள் தொகை, மருந்துப் பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முதல்வா் மருந்தகங்கள் அமையவுள்ளன. அதன்படி மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40, சென்னையில் 37 முதல்வா் மருந்தகங்கள் அமையவுள்ளன.

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயார்: அண்ணாமலை

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு பதில் சவால் விடுத்துள்ளார்.அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

அய்யாசாமி வைகுண்ட பெருமாள் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

முதல்வரை அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்: மா.சுப்பிரமணியன்

முதல்வர், துணை முதல்வரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசையும் முதல்வர் ... மேலும் பார்க்க

ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்!

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை முதல்வர் திறந்து வைத்... மேலும் பார்க்க

அஞ்சலையம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை!

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி சென்னை பனையூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்!

தமிழகத்தில் பிப். 23, 24 தேதிகளில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பிப். 20, 21 தேத... மேலும் பார்க்க