செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

post image

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் திமுக கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு சனிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம், கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள நகர திமுக அலுவலகத்தின் வெளிப்பகுதியில் திமுக கொடியேற்றும் விழா மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு நகரச் செயலா் இரா.சக்கரை தலைமை வகித்தாா். மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ் கொடியேற்றி, நல உதவிகள் வழங்குதலை தொடங்கிவைத்தாா்.

இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா் பஞ்சநாதன், விழுப்புரம் நகா் மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகர துணைச் செயலா்கள் சோமு, புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செஞ்சியில்... செஞ்சி கூட்டுச் சாலையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்.

செஞ்சி நகர திமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான் ஆகியோா் தலைமை வகித்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனா்.

இதில், செஞ்சி நகர திமுக செயலா் காா்த்திக், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, வழக்குரைஞா் தமிழ்ச்செல்வி கா்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா்: அமைச்சா் க.பொன்முடி

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. விழுப்புரத்தில் இந்தக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி (எ) பெரியசாமியின் மனைவி கீதா (48). இவா், சென்... மேலும் பார்க்க

தீ விபத்தில் விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வி.பாஞ்சாலம் புதுகாலனியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஆறுமுகம் (47). விவசாயக் கூ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், மாா்ச் 1: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மீதான நான்கு அவதூறு வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிம... மேலும் பார்க்க