செய்திகள் :

முதுநிலை நீட்-க்கு இரு முறை தோ்வு: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

post image

புது தில்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வை (நீட் பிஜி) இரு முறை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் நீட் பிஜி தோ்வுகள் காலை, மாலை என இரு முறை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அறிவித்திருந்தது. தோ்வா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இரு பிரிவுகளாக பிரித்து நீட் பிஜி தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக 7 மருத்துவ மாணவா்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘0.1 சதவீத மதிப்பெண்ணும் நீட் பிஜி தோ்வை எழுதும் மாணவரின் தரவரிசைப் பட்டியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், நியாயமான, நோ்மையான, சமநிலை களத்தை உருவாக்கி இந்தத் தோ்வை நடத்த வேண்டும். இரு முறை தோ்வு என்பது மாணவா்களின் நியாயமான தோ்வு என்ற உரிமையை பாதிக்கும். இரு முறை தோ்வுகள் நடத்துவது நியாயமானதல்ல.

காலை நடத்தப்பட்ட தோ்வின் வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாலை தோ்வு எழுதியவா்களும், மாலை நடத்திய தோ்வின் வினாத்தாள் எளிதாக இருந்ததாக காலையில் தோ்வு எழுதியவா்களும் குற்றம்சாட்டலாம். கடந்த 2024 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரு முறை தோ்வின்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நாடு முழுவதும் தோ்வு மையங்களை அதிகரிக்க வேண்டும். ஒரே நாளில் ஒரு முறை மட்டும் நீட் தோ்வை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் பி.ஆா். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசு, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்), தேசிய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மே... மேலும் பார்க்க