செய்திகள் :

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

post image

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.

ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?

ஆரோன் ஃபின்ச் கூறியதென்ன?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் போட்டியை வென்று கொடுக்கும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆரோன் ஃபின்ச் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனைத்து விஷயங்களும் மீண்டும் சரியாக அமைந்துவிட்டதாக உணர்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சில வீரர்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதையும் படிக்க:ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

ரோஹித் சர்மாவை மறந்துவிடுங்கள், அவர் லெஜண்டரி வீரர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தால், அவர்களால் இமாலய இலக்கை குவிக்க முடியும். பந்துவீச்சை தேர்வு செய்தாலும் அந்த அணிக்கு பிரச்னை இல்லை. பந்துவீச்சில் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் இருக்கிறார்கள். அழுத்தமான சூழலில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நாளை மறுநாள் (மார்ச் 23) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி, கேகேஆர் பயிற்சியை பாதித்த மழை; நாளை போட்டி நடைபெறுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) மு... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: புதிய கேப்டன்கள்; முதல் போட்டியில் வெற்றி யாருக்கு?

18-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர்... மேலும் பார்க்க

300* ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளது! -இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்க வி... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

ஹார்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து, டி20 உலகக் க... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் தரமான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். அதனால், 23 வயதாகும் ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் இடம் பிடித்தாலும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா, இ... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்திய வீரர் ஷர்துல் தாகுர் லக்னௌ அணியில் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை(மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்... மேலும் பார்க்க