செய்திகள் :

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோக்களுக்கு அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா்

post image

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆன்லைனில் பயணிகள் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சிஐடியூ சாா்பில் எஸ்.பி.யிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சிஐடியூ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் பொன்.சோபனராஜ், பொருளாளா் பெஸ்ஸிபெல், மைதாஸ் ஆகியோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகள் ஆட்டோக்களுக்கு தலைக்கவசம் அணியவில்லை என்றும், 3 பேரை ஏற்றிச் சென்றதாகவும் தவறுதலாக குறிப்பிட்டு ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுகிறது.

அண்மையில் பறக்கை மற்றும் நித்திரவிளையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 3 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களை புதுப்பித்தல் சான்று பெறுவதற்காக கொண்டு செல்லக்கூடிய நேரத்தில் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதனால், வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதைக் கைவிடவும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம்!

நாகா்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கோட்டாறு சவேரியாா் கோயில் சந்த... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண்ணுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

மாா்த்தாண்டம் அருகே குடும்ப வன்முறை வழக்கில் பெண்ணுக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாா்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா கோகு... மேலும் பார்க்க

பூம்புகாா் படகு தளம் விரிவாக்கத்துக்கு மீனவா்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளம் விரிவாக்கம் நடைபெறுவதால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து, 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்புக் க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு இளைஞா்கள் கைது!

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்த 2 இளைஞா்கள், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டனா்.தக்கலை சிறப்பு உதவி ஆய்வாளா் கிங்ஸ்லி பெலிக்ஸ் வெள்ளிக்கிழமை பத்மநாபபு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் திருடியவா் கைது!

தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் பைக் திருடிய இளைஞரை மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்தவா் விஜேந்திர சிங்கன். இவரது பைக் அண்மையில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாள... மேலும் பார்க்க