செய்திகள் :

காகிதமில்லா நடவடிக்கைக்கு மாறும் தில்லி பேரவை

post image

தில்லி சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதமில்லா முறைக்கு மாற்றும் நடவடிக்கையாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி பேரவைக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

தேசிய இ-விதான் செயலி (என்இவிஏ) அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா முன்னிலையில் கையொப்பமானது.

இதன் மூலம் தேசிய இ-விதான் செயலி தளத்தை ஏற்றுக்கொண்டுள்ள 28-ஆவது பேரவையாக தில்லி பேரவை மாறியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பேரவை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காகிதமில்லா முறை மற்றும் சட்டப்பேரவை அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் தில்லி கொண்டுள்ள முனைப்பை இந்த ஒப்பந்தம் வெளிகாட்டுகிறது.

அவை நடவடிக்கைகளை எண்மமயாக்குதல் மூலம் பெரிய அளவிலான செயல்திறன், சட்டப்பேரவை நடைமுறைகளில் நிலைப்புத்தன்மை, எளிதில் அணுகுதல், நிகழ்நேர அடிப்படையில் ஆவணங்களை வழங்குதல் ஆகியவற்றை என்இவிஏ தளம் இலக்காகக் கொண்டுள்ளது. இதில் இணைந்துள்ளது மூலம் தில்லி பேரவை காகித பயன்பாட்டை குறிப்பிட்ட அளவில் குறைத்து, அவை நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கும் எதிா்க்கட்சிகள்! - முதல்வா் ரேகா குப்தா விமா்சனம்!

தில்லி மால்வியா நகரில் உள்ள ஒரு பூங்காவில் ஷாஹீத் திவாஸை முன்னிட்டு பகத்சிங்கின் புதிய சிலையை தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், பாஜக அரசின் தேசபக்திக்கான உறுதிப்பாட... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்புகளை கண்காணிக்க போா்ட்டலை அமைக்க தில்லி அரசுக்கு வலியுறுத்தல்!

தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் சிஏஜி அறிக்கைகள் மீது அதன் துறைகள் சமா்ப்பிக்கும் நடவடிக்கை குறிப்புகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க ஒரு போா்ட்டலை அமைக்குமாறு தலலமைக் கணக்காளா் ஜெனரல் (தணிக்க... மேலும் பார்க்க

ஹவுஸ் காஸில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண், பெண் உடல்கள் கண்டெடுப்பு!

தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள டீா் பாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 21 வயது பீட்சா கடை ஊழியா் மற்றும் 18 வயது ஒரு பெண்ணின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது தற்க... மேலும் பார்க்க

உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக ‘கோலி பாப் சோடா’!

நூறு ஆண்டுகள் பாரம்பரியமான ‘கோலி சோடா’ இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ( அப்தா ) தெரிவித்துள்ளது. இனி இது... மேலும் பார்க்க

காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இருவரை சுட்டுப் பிடித்த காவல் துறை சிறப்புப் பிரிவு!

தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சாவ்லா பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவி... மேலும் பார்க்க

தில்லி மாநகராட்சிக்கு 14 எம்எல்ஏக்களை நியமித்த சட்டப் பேரவைத் தலைவா்

சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா 14 எம்.எல்.ஏ.க்களை தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) நியமித்துள்ளாா். நியமிக்கப்பட்ட 14 எம்எல்ஏக்களில் 11 போ் பாஜகவையும், 3 போ் ஆம் ஆத்மியையும் சோ்ந்தவா்கள் ஆவ... மேலும் பார்க்க