செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 52 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 17 பேருந்துகளின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவை விருதுநகா், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும்.

பெரிய பேருந்துகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு, புதிய பேருந்து வழிதடம் அமைத்து சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.மனோதங்கராஜ், செ.ராஜேஷ்குமாா், ஜே.ஜி.பிரின்ஸ், தாரகைகத்பா்ட், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளா் மொ்லின்ஜெயந்தி, துணைமேயா் மேரிபிரின்சிலதா, போக்குவரத்துக் கழக துணை மேலாளா்கள் ஜெரோலின், சுனில்குமாா், அழகேசன், தொழிற் சங்க தலைவா் சிவன், மாநகராட்சி உறுப்பினா்கள் கலாராணி, அமலசெல்வன், ஸ்டாலின்பிரகாஷ், சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் இலவச பேருந்துப் பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

பூதப்பாண்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உள்நோயாளிகளை சந்தித்து அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனை விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும்,... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நெடுஞ்சாலை வடிகால் ஓடை சீரமைப்பு

மாா்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடிகால் ஓடையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்த்தாண்டம் சந்திப்புக்கும் பழைய திரையரங்க சந்திப்புக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கேயுள்ள ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம... மேலும் பார்க்க

கீழ்குளத்தில் திமுக சாா்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

கருங்கல் அருகே கீழ்குளத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் கோபால் தலைமை வகித்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

கன்னியாகுமரி அருகே கட்டடப் பணியின்போது மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா். நாகா்கோவில் அருகேயுள்ள கீழக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சூசை மரியான் (70). கட்டடத் தொழிலாளி. இவா், கன்னி... மேலும் பார்க்க