செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் இலவச பேருந்துப் பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறும் வசதியை தமிழக அரசின் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திவரும் மாா்ச் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா அட்டைகளை ஜூன் 30 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து பயணம் செய்யலாம்.

இதையொட்டி, இலவச பேருந்துப் பயண அட்டை புதுப்பித்தலுக்காக செவ்வாய் முதல் சனிக்கிழமைவரை (மாா்ச் 25-29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30-க்குப் பிறகு இணையதளம் வாயிலாக புதிய அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க