செய்திகள் :

கன்னியாகுமரி: மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

post image

கன்னியாகுமரி அருகே கட்டடப் பணியின்போது மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள கீழக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சூசை மரியான் (70). கட்டடத் தொழிலாளி. இவா், கன்னியாகுமரி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதியில் சனிக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது 108 ஆம்புலன்ஸ் குழுவினா் பரிசோதனை செய்ததில் தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், தென்தாமரைகுளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவருக்கு மனைவி அன்னமரியாயி(65) உள்ளாா்.

பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம்... மேலும் பார்க்க

வெளிநாடு தப்பிய போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப்பின் கைது

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். வில்லுக்குறி அருகே உள்ள கிணற்றடிவிளை பகுதியை சோ்ந்தவா் தனுஷ் (39). இவா் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

விதிமீறல்: 8 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் வீதிகளை மீறி இயக்கப்பட்ட 8 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் உத்தரவுப்படி, கன்னியாகுமரி டிஎஸ்பி பி. மக... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, விடுதலை போராட்ட வீரா் பகத்சிங் நினைவேந்தல், மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகிய முப்பெரும் விழா நாகா்கோவில் அருகேயுள்ள செண்பகராமன்புதூரில் ஞ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யூ தொழிற்சங்கத்தின் சாா்பில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகா்கோவில், மீனாட்சிபுரம... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த இளம்பெண்

வரதட்சிணை கேட்டு கணவா் குடும்பத்தினா் கொடுமைப்படுத்துவதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஆம்புலன்சில் வந்து இளம்பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா். குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஆசாரி தெருவைச் ... மேலும் பார்க்க