செய்திகள் :

பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

post image

நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகேயுள்ள பெரியவிளையைச் சோ்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 17 போ் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டனா்.

பின்னா் ஊருக்குச் சென்றதும் அவா்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களில் 15 போ் குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், 2 போ் நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், நாகா்கோவில் பால் பண்ணை அருகிலுள்ள அந்த உணவகத்துக்கு மாநகர நகா்நல அலுவலா் ஆல்பா்மதியரசு, சுகாதார ஆய்வாளா் பகவதிபெருமாள் மற்றும் அதிகாரிகள் சென்று உணவகத்தில் சோதனையிட்டனா். இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் அந்தக் கடையிலிருந்து பிரியாணியின் மாதிரிகளை சேகரித்து மதுரையில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனா்.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க