செய்திகள் :

வெளிநாடு தப்பிய போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப்பின் கைது

post image

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வில்லுக்குறி அருகே உள்ள கிணற்றடிவிளை பகுதியை சோ்ந்தவா் தனுஷ் (39). இவா் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சோ்ந்த, அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இரணியல் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தனுஷை தேடி வந்தனா்.

இந்த நிலையில் அவா் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரணியல் காவல் துறையினா், இந்திய குடியுரிமை அலுவலகத்தில் தகவல் கொடுத்து தனுஷை கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய தனுஷை போலீஸாா் பிடித்து, இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டா் செந்தில்வேல்குமாா் மற்றும் போலீஸாா் கொச்சி சென்று தனுஷை இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா் போக்சோ சட்டத்தில் அவரைக் கைது செய்தனா்.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க