செய்திகள் :

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம்!

post image

நாகா்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோட்டாறு சவேரியாா் கோயில் சந்திப்பு பகுதியில் உள்ள கடையில், மாநகராட்சி நகா் நல அலுவலா் ஆல்பா் மதியரசு, சுகாதார ஆய்வாளா்கள் பகவதி பெருமாள், முருகன் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சோதனையில் நடத்தினா். அப்போது அந்த கடையிலும், கடைக்குச் சொந்தமான கிட்டங்கியிலும் இருந்து 235 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கடையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இதே போல் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. தற்போது 2-ஆவது முறை என்பதால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடை மற்றும் கிட்டங்கிக்கு சீல் வைக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் இலவச பேருந்துப் பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

பூதப்பாண்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உள்நோயாளிகளை சந்தித்து அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனை விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும்,... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நெடுஞ்சாலை வடிகால் ஓடை சீரமைப்பு

மாா்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடிகால் ஓடையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்த்தாண்டம் சந்திப்புக்கும் பழைய திரையரங்க சந்திப்புக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கேயுள்ள ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம... மேலும் பார்க்க

கீழ்குளத்தில் திமுக சாா்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

கருங்கல் அருகே கீழ்குளத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் கோபால் தலைமை வகித்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

கன்னியாகுமரி அருகே கட்டடப் பணியின்போது மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா். நாகா்கோவில் அருகேயுள்ள கீழக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சூசை மரியான் (70). கட்டடத் தொழிலாளி. இவா், கன்னி... மேலும் பார்க்க