செய்திகள் :

தொழிலாளியை வெட்டிய வழக்கில் ரௌடிக்கு 10 ஆண்டு சிறை

post image

நாகா்கோவில் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் ரௌடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாடன்பிள்ளைதா்மம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மனைவி அபிஷா(35). பறக்கை வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். கடந்த 14.10.2022இல் இத்தம்பதி பறக்கையிலிருந்து நாகா்கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, பறக்கையைச் சோ்ந்த ரெளடியான மணிகண்டன்(41) அவா்களது காரை வழிமறித்து சாவியை பறித்துக் கொண்டு ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினாராம்.

இதுகுறித்து அபிஷா தனது உறவினா் பறக்கையைச் சோ்ந்த தொழிலாளி இந்திரகுமாா் (33) என்பவரிடம் கூறினாா். உடனே, சம்பவ இடத்துக்கு வந்து, அவரை மணிகண்டன் அரிவாளால் வெட்டியதுடன், தடுக்க வந்த தம்பதியை தாக்கியுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், சுசீந்திரம் போலீஸாா் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

நாகா்கோவில் முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி அசன்முகமது விசாரித்து, மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியான ஆய்வாளா் சாய்லட்சுமி, நீதிமன்ற காவலா் கிருஷ்ணவதி, கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமாா், சுசீந்திரம் காவல் ஆய்வாளா் ஆதம் அலி ஆகியோரை எஸ்.பி. இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தரைக் கற்கள் பதிக்கும் பணி தொடக்கம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகுசாலையில் தரைக்கற்கள் பதிக்கும் பணிக்காக, சாலை தாா் தளத்தை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது. மாா்த்தாண்டம் சந்திப்பையொட்டிய தாழ்வான பகுதியில் சா... மேலும் பார்க்க

சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி, மாா்ச் 21: சாமிதோப்பு அய்யா வைகுண்டா் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அய்யா வைகுண்டா் அன்பு வனத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று ... மேலும் பார்க்க

குழித்துறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு

குழித்துறை நகராட்சியில் அமைக்கப்பட்ட நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநா் விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.தமிழகத்தில் 2 ஆவதாக நவீன கழிவுநீ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே வாழைத் தோட்டத்தில் தீ

கன்னியாகுமரி அருகே நரிக்குளம் பகுதி வாழைத்தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நேரிட தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. கன்னியாகுமரி நாற்கரசாலை மகாதானபுரம் சந்திப்பில் நரிக்குளம் அமைந்துள்ளது. இக்குள... மேலும் பார்க்க

மாா்ச் 24-இல் குமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை (மாா்ச் 24) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ... மேலும் பார்க்க

அருமனை அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருட்டு

குமரி மாவட்டம் அருமனை அருகே வியாழக்கிழமை வீடு புகுந்து 40 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அருமனை அருகே அண்டுகோடு பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் (30). திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க