செய்திகள் :

300* ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளது! -இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

post image

ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்க விருக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கடந்தாண்டு அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. அதிரடி ஆட்டக்காரர்களுக்குப் பஞ்சமில்லாத ஹைதராபாத் அணியில் இஷான் கிஷனின் வருகை அதிக வலிமையாக காணப்படுகிறது.

கடந்தாண்டிலேயே மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் குவித்த ஹைதராபாத் அணி, பெங்களூருக்கு எதிரான போட்டியில் 287 ரன்கள் குவித்து வியக்க வைத்தது.

இதையும் படிக்க: கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?

தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவரும் இணைந்து பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். அவர்களுடன் கிளாசன், கிஷன், அபினவ் மனோகர், நிதீஷ்குமார் ரெட்டி உள்ளிட்ட அதிரடி வீரர்களின் பட்டாளமே அந்த அணியில் நிரம்பி வழிகிறது. இதனால், ரசிகர் அனைவரும் இவர்களின் வாணவேடிக்கையைக் காண ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் ஹைதராபாத் அணி பற்றி இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கூறுகையில், “ஹைதராபாத் அணி 3-வது வரிசையில் இஷான் கிஷனை இறக்கிவிட்டால் அவர்களின் பேட்டிங் வரிசை இன்னும் வலுவாக மாறும். தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மாவைத் தவிர்த்து கிளாசன், நிதிஷ் ஆகியோர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அதிரடியாக விளாசினால் 300 ரன்கள் என்பது எளிதானதுதான்.

ஹைதராபாத் அணி தங்களுக்கு ஒரு அளவுகோலை உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் அணி சுதந்திரமாக செயல்படுவதற்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரை பாராட்டியே ஆக வேண்டும். கடந்த தொடரைப் போலவே இந்தத் தொடரிலும் தொடர்வார்கள் என்றுதான் தோன்றுகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

ஆர்சிபி, கேகேஆர் பயிற்சியை பாதித்த மழை; நாளை போட்டி நடைபெறுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) மு... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: புதிய கேப்டன்கள்; முதல் போட்டியில் வெற்றி யாருக்கு?

18-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர்... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் தொடர் நாள... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

ஹார்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து, டி20 உலகக் க... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் தரமான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். அதனால், 23 வயதாகும் ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் இடம் பிடித்தாலும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா, இ... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்திய வீரர் ஷர்துல் தாகுர் லக்னௌ அணியில் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை(மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்... மேலும் பார்க்க