செய்திகள் :

லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

post image

மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்திய வீரர் ஷர்துல் தாகுர் லக்னௌ அணியில் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை(மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான ஷர்துல் தாகுரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அவர் விளையாடிய முன்னாள் அணிகளான சென்னை, கொல்கத்தாவும் ஆர்வம் காட்டவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் ஷர்துல் தாகுர், விக்கெட் வீழ்த்துவதும் மட்டுமின்றி சில முக்கியமான போட்டிகளில் சதம் விளாசி முன்னணி ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மோஷின் கான், மயாங் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளதால், லக்னௌ அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகவுள்ளார் ஷர்துல் தாகுர். மேலும், அவர் லக்னௌ அணியுடன் இணைந்து பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால், மோஷின் கானுக்குப் பதிலாக ஷர்துல் தாகுர் களமிறங்கப்பட வாய்ப்புள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அவர் தில்லிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கப்பதற்காக விசாகப்பட்டினம் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ஆகியோர் லக்னௌ அணியில் இருந்தாலும், யாரும் இதுவரை அணியுடன் சேரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஐபிஎல்லில் இதுவரை 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷர்துல் தாகுர், பேட்டிங்கில் 307 ரன்கள் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாகுர் 11 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடுவராகும் தமிழக வீரர்! ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் 7 புதிய நடுவர்கள்!

ஆர்சிபி, கேகேஆர் பயிற்சியை பாதித்த மழை; நாளை போட்டி நடைபெறுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) மு... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: புதிய கேப்டன்கள்; முதல் போட்டியில் வெற்றி யாருக்கு?

18-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர்... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் தொடர் நாள... மேலும் பார்க்க

300* ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளது! -இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்க வி... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

ஹார்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து, டி20 உலகக் க... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் தரமான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். அதனால், 23 வயதாகும் ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் இடம் பிடித்தாலும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா, இ... மேலும் பார்க்க