செய்திகள் :

இந்தோனேசியா: படகு கவிழ்ந்து ஆஸ்திரேலியப் பெண் பலி! 2 பேர் படுகாயம்!

post image

இந்தோனேசியாவின் பாலி தீவின் அருகே சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள துறைமுகத்திலிருந்து நுஸா பெனிடா எனும் பிரபல சுற்றுலாத் தீவை நோக்கி இன்று (மார்ச் 21) 11 ஆஸ்திரேலியர்கள் உள்பட 13 பேர் ஸீ டிராகன் எனும் படகில் பயணித்து கொண்டிருந்தனர். மேலும், இன்று வழக்கத்தை விட கடலில் மிகப் பெரிய அலைகள் உருவானதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கடலுக்கு அடியிலுள்ள காட்சிகளை ரசித்தவாறு பயணம் மேற்கொண்டிருந்தபோது, ராட்சச அலை தாக்கியதில் அந்த படகிலிருந்த அன்னா மேரி (வயது 39) எனும் ஆஸ்திரேலியப் பெண் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

இதனைத் தொடர்ந்து, எழுந்த மற்றொரு அலையினால் அவர்களது படகு தலைக்குப்புற கடலில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, அருகிலிருந்த படகு அங்கு விரைந்து கடலில் கவிழ்ந்த அந்த படகின் இந்தோனேசியாவைச் சேர்ந்த பணியாளர்கள் இருவர் உள்பட 12 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இருப்பினும், மீட்கப்பட்டவர்களில் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலும், பலியான அன்னாவின் உடலையும் மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுமார் 28 கோடி மக்கள் வாழும் 17,000க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய நாடான இந்தோனேசியாவில் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட படகு விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மா... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற வி... மேலும் பார்க்க

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரும் நேபாளம்!

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 21) வரை பயணம் மேற்கொண்ட நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்சூ ரானா டியூப... மேலும் பார்க்க

போதைத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது!

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேட்டயத்தின் மரங்காட்டுப்பள்ளி எனும் கிராமத்தில் போதைப் பொருள் விநியோகம்... மேலும் பார்க்க

8 லட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்!

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டி... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (மார்ச் 20) நள்ளி... மேலும் பார்க்க