செய்திகள் :

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரும் நேபாளம்!

post image

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 21) வரை பயணம் மேற்கொண்ட நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்சூ ரானா டியூபா இந்தியா வழங்கும் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக 12 நாள் பயணமாக இந்தியா வந்த அமைச்சர் டியூபா புது தில்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்றார். அந்த மாநாட்டில் அவர் மால்டோவா துணைப் பிரதமர் மற்றும் பிலிப்பைன்ஸ், ஜியார்ஜியா உக்ரைன் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

இதையும் படிக்க: பாலியல் குற்றவாளிகளுக்கு சாதகமாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்!

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் ​​இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு கூட்டங்களின் போது ஏற்பட்ட முன்னேற்றங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து, அமைச்சர் டியூபா தனது எக்ஸ் சமூகவளைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த பயணத்தில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ள இரு நாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவால் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேபாளத்தின் மின்சாரத் தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருப்பதினால் அந்நாட்டில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா: படகு கவிழ்ந்து ஆஸ்திரேலியப் பெண் பலி! 2 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவின் அருகே சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள துறைமுகத்திலிருந்து நுஸா பென... மேலும் பார்க்க

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மா... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற வி... மேலும் பார்க்க

போதைத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது!

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேட்டயத்தின் மரங்காட்டுப்பள்ளி எனும் கிராமத்தில் போதைப் பொருள் விநியோகம்... மேலும் பார்க்க

8 லட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்!

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டி... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (மார்ச் 20) நள்ளி... மேலும் பார்க்க