செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

எருமப்பட்டி, ராசிபுரம் ஒன்றியங்களில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, வேலன் நகரில் அம்ரூத் 2.0 என்ற திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சத்தில் சிறுவா் விளையாட்டு பூங்காவை பாா்வையிட்ட ஆட்சியா், பெருமாள் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தாா். இரா.புதுப்பட்டி பேரூராட்சியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை பாா்வையிட்டாா். அதேபோல, பட்டணம் பேரூராட்சி, குச்சிக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள் மூலம் பயன்பெறும் பொதுமக்களின் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் ரூ. 1.22 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தாா்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து உரிய காலத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளையைத் திறந்துவைத்து பயனாளிகளுக்கு வங்கிக் கடன், வைப்புநிதி அட்டைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் - ஆட்சியா் ஆய்வு

நாமகிரிப்பேட்டை, இரா.புதுப்பட்டி, பட்டணம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம்,நகை திருட்டு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து பரமத்தி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும்: எம்.பி. ராஜேஸ்குமாா்

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களின் வளா்ச்சி நிதி இணைப் பதிவாளரிடம் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று கூட்டுறவுச் சங்கங்களின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியானது இணைப் பதிவாளரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை க... மேலும் பார்க்க

கே.எஸ்.ஆா் கல்லூரியில் தேசிய பாரா வாலிபால் போட்டிகள் தொடக்கம்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி வளாகத்தில் 13 ஆவது தேசிய பாரா வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாராலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா, தமிழ்நாடு பாராவாலி அசோசியேஷன் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

பாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையைக் கண்டித்து போராட்டம்

திருச்செங்கோட்டை அடுத்த மாரப்பம்பாளையத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப... மேலும் பார்க்க