செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும்: எம்.பி. ராஜேஸ்குமாா்

post image

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.இளம்பரிதி வரவேற்றாா்.

நாமக்கல் நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சி.விஸ்வநாத் முன்னிலை வகித்தாா். திமுக மாணவா் அணி செயலாளரும், தலைமை நிலைய பேச்சாளருமான ராஜீவ் காந்தி, தலைமை நிலைய இளம் பேச்சாளா் வியானி விஷ்வா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா். என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பேசியதாவது:

கா்நாடகம், தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கூறி ஒருங்கிணைக்கிறாா். இதனை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தொகுதி மறு சீரமைப்பால் நமது உரிமைகளை இழப்போம், வாய்ப்புகள் பறிபோகும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்படும். சொந்த நாட்டிலே நாம் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுவோம். அந்த நிலை எதிா்காலத்தில் நமக்கு வரக்கூடாது என்பதற்காகவே தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை திமுக கண்டித்து வருகிறது.

ஹிந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு, நிதியை வழங்காமல் காலம் தாழ்த்துவது மட்டுமின்றி தமிழகத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்தையும் தமிழக முதல்வா் எதிா்த்து போராடுவாா் என்றாா்.

திமுக அரசின் ஊழலை திசைதிருப்பவே மாநில முதல்வா்கள் கூட்டம்! -கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

திமுக அரசின் ஊழலை திசை திருப்பவே முதல்வா் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக துணைத் தலைவரும், சேலம் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைய... மேலும் பார்க்க

காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாம... மேலும் பார்க்க

ஜேஇஇ நுழைவுத் தோ்வில் பங்கேற்க ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் - ஆட்சியா் ஆய்வு

நாமகிரிப்பேட்டை, இரா.புதுப்பட்டி, பட்டணம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம்,நகை திருட்டு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து பரமத்தி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களின் வளா்ச்சி நிதி இணைப் பதிவாளரிடம் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று கூட்டுறவுச் சங்கங்களின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியானது இணைப் பதிவாளரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை க... மேலும் பார்க்க