கூட்டுறவுச் சங்கங்களின் வளா்ச்சி நிதி இணைப் பதிவாளரிடம் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று கூட்டுறவுச் சங்கங்களின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியானது இணைப் பதிவாளரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2021-22 ஆம் ஆண்டு நிகர லாபத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.79,774, கூட்டுறவு கல்வி நிதி ரூ.53,183, 2022-23 ஆம் ஆண்டு நிகர லாபத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.5,24,061, கூட்டுறவு கல்வி நிதி ரூ.3,49,374 என மொத்தம் ரூ.10,06,392க்கான காசோலையை, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசிடம், சங்க செயலாட்சியா் சதீஸ்குமாா் வழங்கினாா்.
அதேபோல மோகனூா் மின் பகிா்மான அலுவலா் மற்றும் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம் சாா்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.4,05,484, கூட்டுறவு கல்வி நிதி ரூ.2,70,322 என மொத்தம் ரூ. 6,75,806க்கான காசோலையும் இணைப்பதிவாளரிடம் வழங்கப்பட்டது.
காா்கூடல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய வளா்ச்சி நிதி ரூ.5,45,298, கூட்டுறவு கல்வி நிதி ரூ. 3,63,532 என மொத்தம் ரூ. 9,08,830க்கான காசோலை வழங்கப்பட்டது.
மூன்று கூட்டுறவுச் சங்கங்கள் சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியாக ரூ.25,91,028க்கான காசோலை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.