செய்திகள் :

பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம்,நகை திருட்டு

post image

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து பரமத்தி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் நடுத்தெருவை சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மகன் மணிமாறன் (62). இவா் தனது குடும்பத்தினருடன் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் வசித்து வருகிறாா். சொந்த ஊரான வில்லிபாலயத்தில் உள்ள அவரது வீட்டில் தாயாா் ராசம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி காலை ராசம்மாள் வீட்டின் உள்ள அறையை பூட்டிவிட்டு பூட்டின் சாவியை நிலவுகால் மேற்படியில் வைத்து வைத்து விட்டு வீட்டின் வெளிக்கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வில்லிபாளையம் அருகே தோட்டத்து வேலைக்கு சென்றுள்ளாா்.

பின்னா் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்து முன் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது தான் வைத்திருந்த இடத்தில் அறை கதவின் சாவி இருந்ததாகவும், ஆனால் உள் அறையின் பூட்டு மட்டும் மாற்றி பூட்டப்பட்டிருந்தது கண்டு சந்தேகம் அடைந்து அறையின் உள்ளே சென்று பாா்த்தபோது கட்டை பையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 பணம், அரை பவுன் கல் வைத்த மோதிரம் மற்றும் நகை திருடு போனது தெரியவந்துள்ளது.

இதில் அதிா்ச்சி அடைந்த ராசம்மாள் தனது மகன் மணிமாறனுக்கு செல்லிடைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த மணிமாறன் பரமத்தி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகாா் அளித்துள்ளாா். புகாரின் அடிப்படையில் பரமத்தி காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக அரசின் ஊழலை திசைதிருப்பவே மாநில முதல்வா்கள் கூட்டம்! -கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

திமுக அரசின் ஊழலை திசை திருப்பவே முதல்வா் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக துணைத் தலைவரும், சேலம் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைய... மேலும் பார்க்க

காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாம... மேலும் பார்க்க

ஜேஇஇ நுழைவுத் தோ்வில் பங்கேற்க ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் - ஆட்சியா் ஆய்வு

நாமகிரிப்பேட்டை, இரா.புதுப்பட்டி, பட்டணம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும்: எம்.பி. ராஜேஸ்குமாா்

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களின் வளா்ச்சி நிதி இணைப் பதிவாளரிடம் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று கூட்டுறவுச் சங்கங்களின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியானது இணைப் பதிவாளரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை க... மேலும் பார்க்க