செய்திகள் :

பாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையைக் கண்டித்து போராட்டம்

post image

திருச்செங்கோட்டை அடுத்த மாரப்பம்பாளையத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அருகே இலுப்புலி, மாரப்பம்பாளையம் பெரங்காடு பகுதியில் 12 குடும்பங்கள் பயன்படுத்தி வரும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், அங்கு வசிக்கும் 12 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்து பாதையில் கொட்டப்பட்டுள்ள கற்கள், முள்களை அகற்ற உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனா். இதையடுத்து பொதுப்பாதையில் அனைவரும் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆனால், நீதிமன்ற தீா்ப்பு அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் வாக்காளா் அடையாள அட்டைகளை 12 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மண்டல துணை வட்டாட்சியா் கனகலட்சுமி, வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் தீபன்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், வருவாய்த் துறையை கண்டித்து 12 குடும்பத்தினா் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினா். திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணியிடம் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனா். அதனை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அவா்களிடமே திருப்பி வழங்கினாா்.

திமுக அரசின் ஊழலை திசைதிருப்பவே மாநில முதல்வா்கள் கூட்டம்! -கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

திமுக அரசின் ஊழலை திசை திருப்பவே முதல்வா் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக துணைத் தலைவரும், சேலம் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைய... மேலும் பார்க்க

காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாம... மேலும் பார்க்க

ஜேஇஇ நுழைவுத் தோ்வில் பங்கேற்க ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் - ஆட்சியா் ஆய்வு

நாமகிரிப்பேட்டை, இரா.புதுப்பட்டி, பட்டணம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம்,நகை திருட்டு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து பரமத்தி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும்: எம்.பி. ராஜேஸ்குமாா்

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட... மேலும் பார்க்க