செய்திகள் :

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் கைது

post image

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை உழவா் சந்தை அருகில் கஞ்சா விற்பனை செய்த மோா்குளம் ஜேம்ஸ் மகன் விஜய் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மணல்மேடு ஆறுமுகம் மகன் குமாா், மணப்பாறை நாகம்மாள் தெருவைச் சோ்ந்த பா. தனபால் என்பவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக சூ. யாக்கோப் (எ) லெனின் விஜயபாஸ்கா் ஆகியோரை போலீஸாா் பிடித்தனா்.

மணப்பாறை - குளித்தலை சாலையில் மணப்பாறை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த கரூா் மாவட்டம் குளித்தலை வட்டம் தேவா்மலை பகுதியைச் சோ்ந்த குழந்தைவேல் மகன் பிரவீன்குமாா் மற்றும் அவருடைய நண்பா்கள் கரும்புள்ளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் தினேஷ், பெரியசாமி மகன் சந்துரு, பழனிச்சாமி மகன் ஸ்டாலின் மற்றும் மணப்பாறை மோா் குளத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நாகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் வாகனத்தில் வருபவா்கள் மற்றும் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் மீதும் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 70.71 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து பயணியொருவா் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்த... மேலும் பார்க்க

திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 18 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 18 பேரை போலீஸாா்... மேலும் பார்க்க

பாப்பாத்தியம்மன் கோயிலில் திருட்டு

துறையூா் அருகே பாப்பாத்தியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மற்றும் பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். செல்லிப்பாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாப்பாத்தியம்மன் கோயிலுக்குள் அண்மை... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் 5 போ் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூா் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியில் உள்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் படத்துடனான சுவரொட்டி: பாஜக பெண் நிா்வாகி மீது வழக்கு

துறையூரில் டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் ஸ்டாலின் படத்துடனான சுவரொட்டியை ஒட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டதாக பாஜக பெண் நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். துறையூா் எம்எஸ்கே மஹால் சந்... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் சூரிய பூஜை

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சூரிய பூஜை நடைபெற்றது. திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டில் புரட்டாசி 6, 7, 8 மற்றும... மேலும் பார்க்க