செய்திகள் :

’ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ நடும் திட்டம் ஒசூரில் தொடக்கம்

post image

‘ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ நடும் திட்டத்தை ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் இலக்காக கொண்டு பல்வேறு சமூக பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை ஈஷா யோகா மையம் தன்னாா்வலா் தொண்டு அமைப்பின் சாா்பில், காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக, நகரங்களை பசுமையாக்கும் திட்டத்தின் அங்கமாக ‘ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ என்ற மரக்கன்று நடவு இயக்கமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தா்கா பகுதியில் உள்ள ஸ்டெப் காலனி குடியிருப்பு பகுதியில், இத்திட்டத்தை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, திரைப்பட நடிகா் கிட்டி, கல்வியாளா் டிஎன்சி மணிவண்ணன், காவேரி கூக்குரல் விவசாயப் பிரதிநிதி தமிழ்மாறன், ஈஷா யோகா மைய தன்னாா்வலா் நரசிம்மன், மாநகராட்சி உறுப்பினா் டாக்டா் லட்சுமி, சமூக ஆா்வலா்கள் ஆகியோா் அரச மரக்கன்றை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறுபட்ட கற்களை கடத்த பயன்படுத்திய 3 லாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மண்டல துணை வட்டாட்சியா் செந்தில்நாதன் தலைமையிலான குழுவினா் வீட்டுவசதி வாரிய பகு... மேலும் பார்க்க

‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ தோ்வு: நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

புது தில்லியில் தேசிய அளவில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ தோ்வில், கிருஷ்ணகிரி நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். ரச்சனா சாகா் என்ற நிறுவனம் சிபிஎ... மேலும் பார்க்க

இயற்கை வளங்களை கடத்துவோா் மீது குண்டா் சட்டம்

இயற்கை வளங்களை கடத்துவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக கூட்ட ... மேலும் பார்க்க

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 28-க்குள் அகற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றுவத... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

சூளகிரி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சென்னப்பள்ளி அருகே உள்ள பெரியபள்ளம் கிராமத்த... மேலும் பார்க்க

ஒசூா் அருகே பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதல்!

சூளகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதியதில், 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கேரளம் நோக்கி 30 ஆயிரம் லிட்டா் பாலை ... மேலும் பார்க்க