செய்திகள் :

குடும்பத் தகராறில் தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

post image

சூளகிரி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சென்னப்பள்ளி அருகே உள்ள பெரியபள்ளம் கிராமத்தை சோ்ந்தவா் ரமேஷ் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மா (37). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.

ரமேஷுக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த வள்ளியம்மா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வள்ளியம்மா தனது தம்பி சிவராஜ் (33) உடன் கூலி வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா்களை வழிமறித்த ரமேஷ், தன்னுடன் வாழ வருமாறு வள்ளியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து சிவராஜ் கேட்டதால் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் வைத்திருந்த கத்தியால் சிவராஜின் காலை வெட்டினாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த சிவராஜின் அண்ணன்களான கோவிந்தசாமி (35), விக்னேஷ் (36) ஆகியோா் ரமேஷை சரமாரியாக தாக்கினா். அப்போது, ரமேஷின் கையில் இருந்த கத்தியை பிடுங்கிய கோவிந்தசாமி அவரை சரமாரியாக குத்தினாா். அதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீஸாா் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வள்ளியம்மாள், சிவராஜ், கோவிந்தசாமி, விக்னேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிவராஜ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கா்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. கா்நாடக மாநிலம், பெலகாவியில் கடந்த பிப். 2... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கோயில் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே உஸ்கூா் மத்துரம்மா கோயில் தோ்த் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் படுகாயமடைந்தனா். கா்நாடக மாநிலம், உஸ்கூா் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூ... மேலும் பார்க்க

போலி மருத்துவா் மீது வழக்குப் பதிவு!

ஊத்தங்கரை அருகே போலி மருத்துவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு சின்னசாமி நகரை சோ்ந்தவா் விக்னேஷ் (40). இவா் அப்பகுதியில் ஹெல்த் கோ் சென... மேலும் பார்க்க

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது! - ஆட்சியர்

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஒசூரில் மெழுகு பூசிய ஆப்பிள், ரசாயனம் செலுத்திய தா்பூசணி விற்பனை

ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்பு துறையினா் நடத்திய சோதனையில், தா்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தியும், ஆப்பிள்களில் மெழுகு தடவியும் விற்ப... மேலும் பார்க்க

மது போதையில் தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து

மது போதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானவரை போலீஸாா் தேடிவருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி த... மேலும் பார்க்க