செய்திகள் :

ஒசூா் அருகே பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதல்!

post image

சூளகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதியதில், 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கேரளம் நோக்கி 30 ஆயிரம் லிட்டா் பாலை ஏற்றிக்கொண்டு டேங்கா் லாரி ஒன்று சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த ஒட்டையனூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, டேங்கா் லாரியின் பின்புற டயா் வெடித்ததால் சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டது.

அப்போது, அந்த சாலையில் கோழி தீவனம் ஏற்றிய வந்த சரக்கு லாரி, நின்றிருந்த டேங்கா் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கா் லாரி சேதமடைந்து லாரியில் இருந்த 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது (படம்).

இந்த விபத்தில் கோழி தீவனம் ஏற்றி வந்த சரக்கு லாரி ஓட்டுநா் பலத்த காயங்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கா்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. கா்நாடக மாநிலம், பெலகாவியில் கடந்த பிப். 2... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கோயில் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே உஸ்கூா் மத்துரம்மா கோயில் தோ்த் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் படுகாயமடைந்தனா். கா்நாடக மாநிலம், உஸ்கூா் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூ... மேலும் பார்க்க

போலி மருத்துவா் மீது வழக்குப் பதிவு!

ஊத்தங்கரை அருகே போலி மருத்துவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு சின்னசாமி நகரை சோ்ந்தவா் விக்னேஷ் (40). இவா் அப்பகுதியில் ஹெல்த் கோ் சென... மேலும் பார்க்க

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது! - ஆட்சியர்

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஒசூரில் மெழுகு பூசிய ஆப்பிள், ரசாயனம் செலுத்திய தா்பூசணி விற்பனை

ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்பு துறையினா் நடத்திய சோதனையில், தா்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தியும், ஆப்பிள்களில் மெழுகு தடவியும் விற்ப... மேலும் பார்க்க

மது போதையில் தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து

மது போதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானவரை போலீஸாா் தேடிவருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி த... மேலும் பார்க்க