செய்திகள் :

8 லட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்!

post image

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினர் மற்றும் ஆப்கான் குடியுரிமை அட்டை உடையவர்களை வருகின்ற மார்ச் 31க்குள் அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதினால் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இன்று (மார்ச் 20) வரை 8,74,282 ஆப்கன் மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்நிலையில, திருப்பி அனுப்பப்படும் ஆப்கன் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் முறையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளின்போது அவர்கள் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற மார்ச் 31 வரை இந்த திட்டத்திற்கான காலகெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பின்னர் எல்லையைக் கடக்கும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று (மார்ச் 20) ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி பாகிஸ்தான் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தோனேசியா: படகு கவிழ்ந்து ஆஸ்திரேலியப் பெண் பலி! 2 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவின் அருகே சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள துறைமுகத்திலிருந்து நுஸா பென... மேலும் பார்க்க

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மா... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற வி... மேலும் பார்க்க

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரும் நேபாளம்!

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 21) வரை பயணம் மேற்கொண்ட நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்சூ ரானா டியூப... மேலும் பார்க்க

போதைத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது!

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேட்டயத்தின் மரங்காட்டுப்பள்ளி எனும் கிராமத்தில் போதைப் பொருள் விநியோகம்... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (மார்ச் 20) நள்ளி... மேலும் பார்க்க