செய்திகள் :

அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!

post image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதிபர் டிரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்த 67,000க்கும் மேற்பட்டோரின் பட்டியலை பெற்றுள்ளதாக தென் ஆப்பிரிக்காவிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்.7 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் ஆப்பிரிக்க அரசு அந்நாட்டிலுள்ள நில உரிமையாளர்களின் மீது இன ரீதியான வன்முறையை தூண்டுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா வழங்கும் நிதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தலைமை செயலாளர் மார்கோ ரூபியோவிற்கு வழங்கப்பட்ட உத்தரவில் தென் ஆப்பிரிக்காவின் சிறுபான்மையினரான ஆஃப்ரிக்கானெர்ஸ் எனும் வெள்ளையின மக்கள் இனப்பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அவர்கள் அகதிகள் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளபட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் குடியேற விருப்பம் தெரிவித்த 67,000 தென் ஆப்பிரிக்கர்களின் பட்டியலை அமெரிக்காவிலுள்ள தென் ஆப்பிரிக்க வர்த்தக சபை அமெரிக்க தூதரகத்திடம் சமர்பித்துள்ளது.

இந்த பட்டியல் குறித்த தகவல்கள் தூதரகம் தரப்பில் வெளியிடப்படாத நிலையில், அந்த பட்டியலில் மொத்தம் 67,042 பெயர்கள் உள்ளதாகவும் அதில் பெரும்பாலானோர் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என வர்த்தக சபையின் தலைவர் நீல் டைமண்ட் கூறியுள்ளார்.

மேலும், அதிபர் டிரம்ப்பின் இந்த திட்டத்தை செயல்படுத்த அடுத்தக்கட்ட உத்தரவுகளுக்காக தென் ஆப்பிரிக்காவிலுள்ள அமெரிக்க தூதரகம் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளாது.

முன்னதாக, அமெரிக்காவுக்கான தென் ஆப்பிரிக்காவின் தூதரை வெளியேற்றிய அதிபர் டிரம்ப், அந்நாட்டில் வெள்ளையின மக்களுக்கு எதிராக இனவெறி தூண்டப்பட்டு அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை இனப்படுகொலை எனக் கூறி ஐ.நா. நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளதை விமர்சித்த அவர் ஹமாஸ் போராளிக்குழுவையும், ஈரான் நாட்டையும் தென் ஆப்பிரிக்கா ஆதரித்து அமெரிக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் சுமார் 2.7 மில்லியன் வெள்ளையின மக்களில் (ஆஃப்ரிக்கானெர்ஸ்) பெரும்பாலானோர் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டில் குடியேறிய டச்சு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த காலனிக்காரர்களின் நேரடி வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா: படகு கவிழ்ந்து ஆஸ்திரேலியப் பெண் பலி! 2 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவின் அருகே சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள துறைமுகத்திலிருந்து நுஸா பென... மேலும் பார்க்க

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மா... மேலும் பார்க்க

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரும் நேபாளம்!

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 21) வரை பயணம் மேற்கொண்ட நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்சூ ரானா டியூப... மேலும் பார்க்க

போதைத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது!

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேட்டயத்தின் மரங்காட்டுப்பள்ளி எனும் கிராமத்தில் போதைப் பொருள் விநியோகம்... மேலும் பார்க்க

8 லட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்!

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டி... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (மார்ச் 20) நள்ளி... மேலும் பார்க்க