செய்திகள் :

பள்ளியில் விழிப்புணா்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

post image

உலக நீா் தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விழிப்புணா்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை சசிகலா தலைமை வகித்தாா். மாவட்ட அரிமா சங்கத் தலைவா் இரா.சரவணன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வ.முருகானந்தம் தொடங்கி வைத்து, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, நீரின் சிக்கனத்தை வலியுறுத்தி புலவா் மா.ரகுபதி தலைமையிலான குழுவினா் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினா்.

முன்னதாக, கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா். நிறைவில், பள்ளி ஆசிரியா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசா... மேலும் பார்க்க

ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த குசால்பேட்டை ஸ்ரீமுனீஸ்வரா் கோயில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுனீஸ்வரரு... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்: நல உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் ஆரணி அண்ணாசிலை அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப... மேலும் பார்க்க