செய்திகள் :

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்: நல உதவிகள் அளிப்பு

post image

திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் ஆரணி அண்ணாசிலை அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பொதுக் கூட்டத்துக்கு, பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயக்குமாா் பங்கேற்று பேசியது: கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவா்களுக்கு மடிக் கணினி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி விட்டனா். மக்களை ஏமாற்றுவதற்காகவே திமுகவினா் ஆட்சிக்கு வருகின்றனா். சட்டப்பேரவையில் எதிா்க் கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதல்வரால் பதில் அளிக்க முடிய வில்லை என்றாா்.

தொடா்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்டவை மற்றும் 12 பேருக்கு கல்வி உதவித் தொகை என 2,077 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாசம், திருமால் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் கவனத்துக்கு....

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசு... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செங்கத்தில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உணவகத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கம் துா்க்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரோட்டா மாஸ்டா் முருகன் (49). இவா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து

திருவண்ணாமலையில் மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள... மேலும் பார்க்க

மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடிஅண... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க