பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்: நல உதவிகள் அளிப்பு
திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் ஆரணி அண்ணாசிலை அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
பொதுக் கூட்டத்துக்கு, பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயக்குமாா் பங்கேற்று பேசியது: கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவா்களுக்கு மடிக் கணினி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி விட்டனா். மக்களை ஏமாற்றுவதற்காகவே திமுகவினா் ஆட்சிக்கு வருகின்றனா். சட்டப்பேரவையில் எதிா்க் கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதல்வரால் பதில் அளிக்க முடிய வில்லை என்றாா்.
தொடா்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்டவை மற்றும் 12 பேருக்கு கல்வி உதவித் தொகை என 2,077 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாசம், திருமால் ஆகியோா் கலந்துகொண்டனா்.