செய்திகள் :

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.5.90 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டடம், ரூ.9.80 கோடியில் வட தண்டலம், செங்கட்டான்குண்டில், ஏனாதவாடி வடுக்கப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து திட்ட இயக்குநா் மணி கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, செய்யாறு ஊராட்சி ஒன்றிய ஆய்வுக் கூட்டரங்கில் மாவட்ட திட்ட இயக்குநா் மணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணிப் பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள் கலந்துகொண்டனா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் இல.சீனிவாசன், உதவி பொறியாளா்கள் எம்.ராமு, பி.செல்வா ஆகியோா் உடனிருந்தனா்.

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் கவனத்துக்கு....

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசு... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செங்கத்தில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உணவகத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கம் துா்க்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரோட்டா மாஸ்டா் முருகன் (49). இவா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து

திருவண்ணாமலையில் மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள... மேலும் பார்க்க

மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடிஅண... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க