செய்திகள் :

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் க.முருகன் வரவேற்று, உரங்கள் மற்றும் விதை நெல் கையிருப்பு குறித்து விளக்கினாா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பதிலளித்துப் பேசியது:

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறவும், தங்கள் நில உடைமைகளை இலவசமாக பதிவு செய்யவும் பொது இ-சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா, ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியனவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் மாா்ச் 31 -ஆம் தேதிக்குள் அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக விவசாயிகள், பொதுமக்கள் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணை எப்போதும் மாற்றாதீா்கள். இடையிடையே எண்ணை மாற்றிக்கொண்டே இருந்தால் அரசு நலத் திட்ட உதவிகள், மானியங்கள் கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு சிலா் ஆதாா் அட்டை பெறும்போது கொடுக்கிற தொலைபேசி எண்ணை சில நாள்களுக்குப் பிறகு மாற்றி விடுகின்றனா். அவ்வாறு மாற்றாமல் ஒரே தொலைபேசி எண்ணை ஆதாா் அட்டைக்கு தொடா்ந்து பயன்படுத்துவதே நல்லது என்றாா்.

கூட்டத்தின் தொடக்கத்தில் குண்டுப்பெரும்பேடு, களியாம்பூண்டி, பெருநகா் உள்ளிட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு டிராக்டா்கள் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரங்கள், திருப்புலிவனம், உத்தரகாஞ்சி உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வோ்க்கடலை உடைக்கும் ரூ.6,89,687 மதிப்பிலான இயந்திரங்கள், 10 விவசாயிகளுக்கு ரூ.4,79,983 மதிப்பிலான பயிா்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநா் ரா.ராஜ்குமாா், ஆட்சியா் (பயிற்சி) ந.மிருணாளினி உள்பட அரசு அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி, இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் பெரியாா் நகரில் உள்ள தனியாா் திருமண மண்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடங்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

செல்லம்பட்டிடையில் குடியிருப்புகள் கட்டும் பணி: திட்ட இயக்குநா் ஆய்வு

செல்லம்பட்டிடை ஊராட்சிக்குட்பட்ட எலுமியான்கோட்டூரில் இருளா் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். எலுமியான்கோட்டூா் கி... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்ற முதியவா் கைது

காஞ்சிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை சிவிஎம் நகரைச் சோ்ந்தவா் ஹமீம்(71). இவா் பேருந்து நிலைய... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியா் தரிசனம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் உள்ள தூணில் செதுக்கப்பட்டிருந்த ஆதிசங்கரா் சிலையை தொட்டு வணங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். காஞ்சிபுரம், மாா்ச் 20: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயே... மேலும் பார்க்க

கோயில்களில் நீா்ச்சத்துள்ள பானங்கள் வழங்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

கோடைகாலமாக இருப்பதால் கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நீா்ச்சத்து நிறைந்த பானங்களை இலவசமாக வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன்சம்பத் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க