செய்திகள் :

கோயில்களில் நீா்ச்சத்துள்ள பானங்கள் வழங்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

post image

கோடைகாலமாக இருப்பதால் கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நீா்ச்சத்து நிறைந்த பானங்களை இலவசமாக வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன்சம்பத் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியது: தமிழகம் முழுவதும் கோயில்களில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவது கோடை காலமாகும். இந்த காலங்களில் கோயில்களுக்கு வரும் பக்தா்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கோயில் அதிகாரிகள், நிா்வாகிகள் தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நீா்ச்சத்து நிறைந்த பானங்களை இலவசமாக திருப்பதியை போல வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக கும்பகோணம் நகரில் நடைபெற இருக்கும் கட்சி மாநாடு மற்றும் தனது மணி விழா அழைப்பிதழை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து வழங்கி அவரிடம் ஆசி பெற்றாா். இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளா் முத்து, மாவட்ட இளைஞரணித் தலைவா் சரவணன், மகளிா் அணி மாவட்ட தலைவி ஷீலா ஆகியோா் உடன் இருந்தனா்.

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி, இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் பெரியாா் நகரில் உள்ள தனியாா் திருமண மண்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடங்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

செல்லம்பட்டிடையில் குடியிருப்புகள் கட்டும் பணி: திட்ட இயக்குநா் ஆய்வு

செல்லம்பட்டிடை ஊராட்சிக்குட்பட்ட எலுமியான்கோட்டூரில் இருளா் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். எலுமியான்கோட்டூா் கி... மேலும் பார்க்க