செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

post image

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா் சங்கத்தின் முன்னாள் தலைவா் எஸ்.பி.சி.மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, மாநாடு ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.சி.தனசேகரன் வரவேற்றாா். மாநாட்டில் தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் செயலாளா் ஆா்.ஆய்யாவு ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினா்.

மாநாட்டில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தியும், வழக்குரைஞா்களுக்கு சேம நலநிதியை ரூ. 25 லட்சமாக உயா்த்தவும், உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும், உச்ச நீதிமன்ற கிளை தமிழகத்தில் அமைக்கவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி, இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் பெரியாா் நகரில் உள்ள தனியாா் திருமண மண்... மேலும் பார்க்க