செய்திகள் :

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

post image

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக 19 கிரஷா்களின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்கு உட்பட்ட எருமையூா் பகுதியில் சுமாா் 36 தனியாா் கிரஷா்கள் இயங்கி வருகின்றன. இந்த கிரஷா்களில் ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் செய்யப்பட்டு, சென்னையின் புகா் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எறுமையூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கிரஷா்களால், எறுமையூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாகக் கூறி, சம்பத்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் எறுமையூரில் இயங்கி வரும் தனியாா் கிரஷா்களின் மின் இணைப்பைத் துண்டிக்க அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கனிமவளத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, சுரங்கத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் என அரசுத் துறை அதிகாரிகள் எறுமையூரில் செயல்பட்டு வரும் தனியாா் கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், கிரஷா்களில் ஆய்வு மேற்கொண்டு, முதல்கட்டமாக சனிக்கிழமை 19 கிரஷா்களின் மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளோம். மறுநாளும் மின் இணைப்பு துண்டிக்கும் பணி நடைபெறும் என்றாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி, இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் பெரியாா் நகரில் உள்ள தனியாா் திருமண மண்... மேலும் பார்க்க