செய்திகள் :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியா் தரிசனம்

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் உள்ள தூணில் செதுக்கப்பட்டிருந்த ஆதிசங்கரா் சிலையை தொட்டு வணங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சிபுரம், மாா்ச் 20: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை ஏலவாா்குழலி சமேத ஏகாம்பர நாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயிலுக்கு விஜயம் செய்தாா். கோயில் நுழைவு வாயிலில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி,அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன் மற்றும் கோயில் சிவாச்சாரியாா்கள் மங்கல மேள வாத்தியங்களுடன் பூரண கும்ப மரியாதையோடு வரவேற்றனா். பின்னா் மூலவா் ஏகாம்பரநாதரை தரிசனம் செய்தாா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில், சுவாமிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகளை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கோயில் நுழைவுவாயில் பகுதியில் உள்ள ஒரு கருங்கல் தூணில் ஆதிசங்கரா் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பதை பாா்த்து, அதை தொட்டு வணங்கினாா். அதே தூணில் கண்ணப்ப நாயனாா், காமாட்சி அம்மன் மற்றும் மன்மதன் அம்பெய்தும் சிற்பம் ஆகியவற்றையும் பாா்வையிட்டு, அதன் சிறப்புகளை மற்றவா்களுக்கும் விளக்கிக் கூறினாா். சங்கராசாரியாா் சுவாமிகளுடன் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் உடன் வந்திருந்தனா்.

இது குறித்து சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் கூறுகையில், பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்தைக் குறிக்கும் ஏகாம்பரநாத சுவாமி கோயில் தரிசனம் செய்துள்ளாா். காற்றினைக் குறிக்கும் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்திக்கு 8 நாள்கள் யாத்திரையாக வியாழக்கிழமை செல்கிறாா். இதற்கு முன்பு நீா் ஸ்தலம் என்று போற்றப்படும் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாா். நெருப்புக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையிலும் அண்ணாமலையாரை தரிசனம் செய்தாா். விரைவில் சிதம்பரம் நடராஜா் கோயிலிலும் தரிசனம் செய்யவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி, இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் பெரியாா் நகரில் உள்ள தனியாா் திருமண மண்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடங்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

செல்லம்பட்டிடையில் குடியிருப்புகள் கட்டும் பணி: திட்ட இயக்குநா் ஆய்வு

செல்லம்பட்டிடை ஊராட்சிக்குட்பட்ட எலுமியான்கோட்டூரில் இருளா் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். எலுமியான்கோட்டூா் கி... மேலும் பார்க்க