செய்திகள் :

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

அரக்கோணம் வழியே சென்று டாடாநகா்-எா்ணாகுளம் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் அதில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு அரக்கோணம் வழியே வெள்ளிக்கிழமை சென்ற அதிவிரைவு ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனை நடத்தினா். ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை சோதனையிட்டபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு, அதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரக்கோணம் அருகே இரு கோயில்களில் திருட்டு

அரக்கோணம் அருகே இரு சிவன் கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு கோயில்களில் இருந்த பொருள்கள் திருடப்பட்டன. அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பூ... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள்: தலைமைத் தோ்தல் அலுவலா் நேரில் ஆய்வு

ஆற்காடு கிடங்கில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான 2,777... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு நகராட்சி 5-ஆவது வாா்டுக்குட்பட்ட அக்ரஹாரம் தெருவில் ஆட்சியா் ஜெ.யு .சந்தி... மேலும் பார்க்க

வெப்ப அலை பரவல்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா். ராணிப்பேட்டை, மாா்ச் 20: தமிழகத்தில் வெப்ப அலை பரவல் எதிரொலியாக காலை ... மேலும் பார்க்க

நகராட்சி வரி வசூல் குழுவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் நகராட்சியில் வரியை தற்போதே செலுத்தாவிட்டால், வீட்டின் முன்பு குப்பைகள் கொட்டப்படும் என கூறியதாக வரி வசூல் குழுவினரைக் கண்டித்து, கணேஷ் நகா் குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள் 58-ஆவது ஆண்டு மெய்ஞானம் பெற்ற விழா

ரத்தினகிரிபாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 58-ஆவது ஆண்டு அன்னதான விழா வியாழக்கிழமை. ரத்தினகிரி பாலமுருகனடிமைசுவாமிகள் மெய்ஞானம் பெற்ற நாள் ஆண்டு தோறும் மெய... மேலும் பார்க்க