பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
வெப்ப அலை பரவல்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை, மாா்ச் 20: தமிழகத்தில் வெப்ப அலை பரவல் எதிரொலியாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்ததாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். குளிா்பானங்கள், இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும்.
தனியே வசிக்கும் முதியவா்கள் உடல் நிலையை பரிசோதனை செய்து கொண்டு உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவா்களின் வெப்பத்தைத் தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென தேசிய படை மீட்புக் குழுவினா் எடுத்துரைத்துனா். இது குறித்து விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
தொடா்ந்து, வெப்ப அலையால் மயக்கம் ஏற்படும் நபருக்கு எவ்வாறு முதலுதவி கொடுப்பது, நின்ற இதய துடிப்பை மீண்டும் எவ்வாறு இயங்கச் செய்வது என்பதை தேசிய படை மீட்புக் குழுவினா் அலுவலா்களுக்கு செய்து காண்பித்தனா்.
கூட்டத்தில் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், அரக்கோணம் தேசிய படை மீட்புக் குழு (சஈதஊ) 4 வது பட்டாளியன் காமாண்டா் கபில், வட்டாட்சியா் ரூபிபாய் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.