செய்திகள் :

நகராட்சி வரி வசூல் குழுவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

அரக்கோணம் நகராட்சியில் வரியை தற்போதே செலுத்தாவிட்டால், வீட்டின் முன்பு குப்பைகள் கொட்டப்படும் என கூறியதாக வரி வசூல் குழுவினரைக் கண்டித்து, கணேஷ் நகா் குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் நகராட்சியில் வரி வசூல் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாா்டு வாரியாக குழுவினா் பிரிக்கப்பட்டு வரிவசூல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இதில் கணேஷ் நகா், 4 ஆவது தெரு, 4 ஆவது குறுக்குத்தெரு பகுதிக்கு வந்த குழுவினா், அப்பகுதியில் இருந்த வீட்டு உரிமையாளா்களிடம் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குழாய் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் வரி செலுத்தாதோா் வீடுகளின் வாசல் முன் நகராட்சி குப்பைகள் கொட்டப்படும் என தெரிவித்தனராம்.

இதைக் கண்டித்து அப்பகுதிவாசிகள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும் வரி வசூல் பணியில் தீவிரம் காட்டும்போது அப்பகுதிக்கான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இதுவரை சாலையே போடப்படாமலும், குடிநீா் அளிக்காமலும் இருந்து விட்டு தற்போது வரிகளை வசூல் செய்யும் போது குப்பைகளை கொட்டுவோம் என சொல்லுவது சரியில்லை. வரிகளை செலுத்த இரண்டொரு நாள்களாவது அவகாசம் தர வேண்டும். அதை தராமல் மிரட்டக்கூடாது. மேலும் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என கோரிக்கை மனுவையும் அளித்தனா்.

அரசு மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள செயற்கை மணல்: தூசியால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பள்ளங்களை மூடுவதற்காக பொதுப்பணித் துறையினரால் கொட்டப்பட்டுள்ள எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலால் மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள்... மேலும் பார்க்க

முள்புதா்களில் பதுக்கிய 22 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம், மாா்ச் 22: அரக்கோணம், பாணாவரம் பகுதிகளில் முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். அரக்கோணம் மதுவிலக்கு அமல... மேலும் பார்க்க

தொழிற்சாலைக்கு வரைபட அனுமதி வழங்காமல் தாமதம்: ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை

பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் அமைய உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலைக்கு கட்டட வரைபட அனுமதி வழங்க தாமதம் செய்ததாக நெடும்புலி ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகல... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே இரு கோயில்களில் திருட்டு

அரக்கோணம் அருகே இரு சிவன் கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு கோயில்களில் இருந்த பொருள்கள் திருடப்பட்டன. அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பூ... மேலும் பார்க்க

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் வழியே சென்று டாடாநகா்-எா்ணாகுளம் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் அதில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஜாா்க்கண்ட் மாநிலம், டாட... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள்: தலைமைத் தோ்தல் அலுவலா் நேரில் ஆய்வு

ஆற்காடு கிடங்கில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான 2,777... மேலும் பார்க்க