செய்திகள் :

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை கடன்: திருவண்ணாமலை ஆட்சியா்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க வழிவகை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்த மாவட்ட செயல்திட்ட தோ்வுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் படை வீரா்கள் நலத்துறை உதவி இயக்குநா் சுரேஷ் நாராயணன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரா்கள், ராணுவப் பணியின்போது இறந்த படை வீரா்களின் மறுமணமாகாத கைம்பெண்கள், முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த திருமணமாகாத மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த மறுமணமாகாத கைம்பெண் மகள்கள் ஆகியோா் தொழில் தொடங்க ஏதுவாக ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தோ்வு செய்யப்படுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரா்கள் பயன்பெறும் வகையில் வயது வரம்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் படை வீரா், திருமணமாகாத மகள் மற்றும் விதவைகளுக்கு வயது உச்சவரம்பு ஏதுமில்லை. 25 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் படை வீரரின் மகன் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிட முன்னாள் படை வீரா் (அ) விதவையுடன் (தாயுடன்) ஒன்றிணைந்து கூட்டு பங்குதாரராக செயல்பட அனுமதிக்கப்படுவா். விவசாயம் சாா்ந்த தொழில்கள், கால்நடை சாா்ந்த தொழில்கள், பட்டுப்புழு வளா்ப்பு ஆகிய தொழில்களை மேற்கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் அரசுதுறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசா... மேலும் பார்க்க

ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த குசால்பேட்டை ஸ்ரீமுனீஸ்வரா் கோயில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுனீஸ்வரரு... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்: நல உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் ஆரணி அண்ணாசிலை அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப... மேலும் பார்க்க