செய்திகள் :

மும்பை தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச மகளிர் தினம்; அவள் விகடனுடன் சேர்ந்து கொண்டாடிய தமிழ் பெண்கள்

post image

மும்பை தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்ச்சங்கமும், அவள் விகடனும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மும்பை முழுவதும் இருந்து இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் பெண்கள் பாரம்பர்ய விளையாட்டுக்களான பல்லாங்குழி, பரமபதம் மற்றும் தாயம் விளையாடி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து 3 வயதில் சர்வதேச அளவில் பொது அறிவுத்திறன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான விருதுகளை பெற்ற சமர்த்தா மகாலட்சுமி கெளரவிக்கப்பட்டார்.

3 வயது சிறுமி சமர்த்தா மகாலட்சுமி மேடையில் எந்த வித தயக்கமும் இல்லாமல் கேட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்திருந்த சந்தரி என்பவர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர் பெண்கள் கலந்து கொண்ட மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், கண்ணகி, சாவித்ரி பாய்புலே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஒளவையார், வேலு நாச்சியார், நிர்மலா சீதாராமன் வேடம் அணிந்த பெண்கள் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர்.

ஒவ்வொருவரும் மாறுவேடம் அணிந்து வரும்போது அவர்களின் வாழ்க்கை குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் சொல்விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் ஒன்பது அணிகள் கலந்து கொண்டன. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் இப்போட்டியில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் 5 திரைப்பட கதாநாயகிகளின் பாடல்களுக்கு புவனா வெங்கட் நடனம் ஆடினார்.

போட்டியைத் தொடர்ந்து செளமியா தம்பதி நடத்திய பாட்டுக்கு பாட்டு போட்டி நடந்தது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், விகடன் வெளியீடான `சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்' புத்தகமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சோபனா வாசுதேவன், சுந்தரி வெங்கட் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

சங்கத்தின் தலைவர் ராம்தாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவள் விகடனுடன் இணைந்து முதல் முறையாக மகளிர் தின விழா கொண்டாடுவது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மகளிர் பிரிவை சேர்ந்தவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Jeans: ``ஜீன்ஸ் போடுங்கள், ஆனால் உங்கள் ஜீன்களை மறக்காதீர்கள்'' - சித்தானந்த சரஸ்வதி அறிவுரை

ஜீன்ஸ் (Jeans) என்பது இன்று எல்லோராலும் விரும்பக்கூடிய உடையாகவும், அழகான தோற்றத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஆடையாகவும் இளம் தலைமுறையினர் மத்தியில் தவிர்க்க முடியதாக ஒன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டது. அதேசமயம், ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: சிவராத்திரியில் பக்தர்களைக் கவர்ந்த பரத நாட்டியம்... அசத்திய கலைஞர்கள்.. | Photo Album

நாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்ட... மேலும் பார்க்க

Ramalan: ``உணவு தண்ணீர் மட்டும் இல்ல... இதுவும் கூடாது'' - முஸ்லிம்களின் நோன்பு குறித்து தெரியுமா?

முஸ்லிம்களின் மிகப் பிரதானமான வழிபாடு என்றால் அது நோன்பு. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். இந்த ரமலான் மாதம் நாளை முதல் தொடங்குகிறது. அதென்ன ரமலான் நோன்பு... முஸ... மேலும் பார்க்க

திண்டிவனம்: ``கள ஆய்வில் 8-ம் நூற்றாண்டு கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள்...'' - ஆய்வாளர் சொல்வதென்ன?

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான கோ.செங்குட்டுவன் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தனியார் நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதி... மேலும் பார்க்க

``என் வாழ்க்கையில் சிறந்த முடிவு'' - அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தொழிலதிபர் சொல்வதென்ன?

இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது. அப்படி சென்றவர்கள் சிலர் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். சிலர் சிறிது காலம் இந்தியா வந்து செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலா... மேலும் பார்க்க

கோவை: தமிழ் பண்பாட்டை கொண்டாடும் `தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா!' - ஈஷாவில் பிரமாண்ட ஏற்பாடு

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்ப... மேலும் பார்க்க